சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.
இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான
இளஞ்சூட்டு முத்தத்தில்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
: கையிலிட்ட முத்தம் :
ஒரு சர்ப்பம் போல் மெல்ல
விரல் படர்ந்து
செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து
நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்
இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்
உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment