விழிகள் பேசுமாம் காதலர்களுக்கு
எனக்குமில்லை; உனக்குமில்லை
விழிகள்
நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?
நான் ஒவ்வொரு முறையும்
தோல்வியுரும் போதெல்லாம்
உன்னையே நினைத்துக் கொள்வேன்
என் வெற்றிக்கு
மிக அருகாமையில் நீ
உனது சிரிப்பலைகள்
எனது இதய வாசலைத் தட்டுகிறது,
திறப்பதா? அல்லது
தீர்ப்பதா?
உன் கோபங்கள்
பல நரம்புகளைத் தூண்டிவிடும்
என் ஆசையைக் கூடவா?
தென்றல் தீண்டிவிடுமாம் காதலர்களூக்கு
நானுமில்லை; நீயுமில்லை;
வெற்றிடம்
இனியாவது உன்
இனிய கொலுசுகளோடு
ஓடு!
உன் காலடியிலாவது கிடக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment