விழிகள் பேசுமாம் காதலர்களுக்கு
எனக்குமில்லை; உனக்குமில்லை
விழிகள்
நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?
நான் ஒவ்வொரு முறையும்
தோல்வியுரும் போதெல்லாம்
உன்னையே நினைத்துக் கொள்வேன்
என் வெற்றிக்கு
மிக அருகாமையில் நீ
உனது சிரிப்பலைகள்
எனது இதய வாசலைத் தட்டுகிறது,
திறப்பதா? அல்லது
தீர்ப்பதா?
உன் கோபங்கள்
பல நரம்புகளைத் தூண்டிவிடும்
என் ஆசையைக் கூடவா?
தென்றல் தீண்டிவிடுமாம் காதலர்களூக்கு
நானுமில்லை; நீயுமில்லை;
வெற்றிடம்
இனியாவது உன்
இனிய கொலுசுகளோடு
ஓடு!
உன் காலடியிலாவது கிடக்கிறேன்
3/8/09
முத்தம்
சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.
இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான
இளஞ்சூட்டு முத்தத்தில்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
: கையிலிட்ட முத்தம் :
ஒரு சர்ப்பம் போல் மெல்ல
விரல் படர்ந்து
செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து
நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்
இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்
உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.
இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான
இளஞ்சூட்டு முத்தத்தில்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
: கையிலிட்ட முத்தம் :
ஒரு சர்ப்பம் போல் மெல்ல
விரல் படர்ந்து
செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து
நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்
இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்
உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.
Subscribe to:
Comments (Atom)