Welcome

1/6/08

குடையில்லா மழை

உன் கண்ணீர்த்துளிகளை உன் இமையே விழாது தடுக்கும் போது
எப்போதும் உனைத்தாங்க விரும்பும் நான் அவற்றைச் சிந்த விடுவேனா?

பதில் தெரியாக் கேள்விகளும்
பகலில் கண்ட கனவுகளும்
சொல்லாமுடியா ஏக்கங்களும்
சூழ்ந்தே இருக்கும் கவிதையுமாய்
கண் தெரிந்த குருடன் நான்
கால் கடுக்கக் காத்திருந்தேன்
-காலத்தின் வேகத்தை மறந்தே

பேருந்தில்,
நெரிசலின் நடுவில்...
நீயும், நானும்...
ஒருவர் எதிரில் ஒருவராக...
ஒன்றாக...
சுவாசம் இரண்டும் ஒன்றையொன்று மோதிட...
தூண்டில் விழிகள் சண்டை போட்டு இழுக்க...
இடையிடையே சில வார்த்தைகள்...
பலதடவை இதழ்கள் மலர...
பேருந்து முழுவதும் ஏதேதோ சலசலப்பு
நாம் இருவரும் அமைதியில் தவழ...
ஆனாலும் பேசினோம்
பார்வையால்...
மௌனத்தால்...
தீண்டலால்...


வந்து விட்டாய் நீ வந்து விட்டாய்
என் வாழ்வில் ஏதோ செய்துவிட்டய்
என்ன செய்தாய் அட என்ன செய்தாய்
என்னையேன் இப்படி மாற்றிவிட்டாய்

குழந்தையின் குறும்பு இத்தனை அழகா
குடையில்லா மழையில் இத்தனை சுகமா
இசையுடன் பயணம் எத்தனை இனிமை
இருட்டினில் மட்டும் ஏன் இந்த தனிமை

கனவினில் உந்தன் முகம் கலையதா ஓவியம் போல்
தினசரி வந்து என்னை தித்திக்க வைப்பது ஏன்
எங்கோ தொலைந்த என் பார்வை
உன் கண்களைக் கண்டதும் மோதியதேன்

கனவுகளும் நினைவுகளும் கண்ணெதிரே தோன்றுதே
இனிக்காத்திருக்காத்திருக்க தேவயில்லை கண்கள் உனைக்கண்டதே
எதிரினிலே, என்னருகினிலே நீயிருந்தாய் போதுமே
இனி வேறெதுவும் தேவையில்லை எனக்கிது போதுமே


உன் வருகை சொன்னதும்
நான் என்னவானேன் அக்கணத்தில் ஏதோ ஆனேன்...
என் மனசு யாவும் மழை தான் பொழிந்து
அணுக்கள் முழுதும் பசுமை ஆகின!
அந்தப் பொன்மாலைப் பொழுதில்
உனைக் கண்கள் தேடின!
காணவில்லையென்றதும்
துடிக்கத்தொடங்கின
-மறுபடியும்
வானம் வெளிக்குமே!
மனசு பதைக்குமே!
இன்றாவது உனைக் காண்பேன் என்று!!!

No comments: