என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்
ஒரு துளி
கண்ணீர்கூட
உதிர்க்கலாம்
என்
கல்லறையின் வாசகம்
உன்னுடைதாயிருக்கலாம்
அதை
ப+க்களால் நீ
நிறைக்கலாம்
நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது
இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா?
1/6/08
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment