அன்பே
உன் நினைவுகளில்
நொருங்கும் என்னிதயத்தை
நீயே வைத்துக்ககொள்…..
என்
தேவதையே
பாசாங்குகள்
எதுவுமற்ற
மெல்லிய மலர்
என் இதயம்
நீ
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…
சர்வநிச்சயமாய்
வாழ்வின் நீளத்துக்கும்
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…
என்
புன்னகையின்
ஒரத்தில் இருக்கின்ற
அன்பின் பெரும்வலியை
எப்படிச்சொல்லுவது…..
தேவதைகள்
யாரும் புகமுடியா என்னிதயம்
தேவதைகளின் தேவதையே
உன்னால் தான்
நொருங்கிற்று
கொஞ்சம் இரங்கிவா
என் இதயத்துள் இறங்கு
1/6/08
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment