ஆண்:
எத்தனை ஆசைகள் உன்னிடம்-அதை
ஒவ்வொன்றாய் சொல்லிடு நீ என்னிடம்
வெட்கத்தை இங்கேயும் அகற்றி-உயிரே
உன் உள்ளத்து தவிப்பை நீயும் இறக்கிடேன்
பெண்:
தனிமையில் இருக்கணும் உன்னோடு-அன்பே
தடையின்றி பேசணும் உன் கண்ணோடு
வரிகளால் செதுக்கிய ஓர் கவியோடு
உன் அழகினைப் பாடணும் என் குரலோடு
ஆண்:
கனவுகள் காணணும் உன் விழிதனில்-என்
நினைவுகள் சேரணும் அதன் ஒளிதனில்
பார்வைகள் ரெண்டும் மோதியே-இங்கு
பாறைகள் கூட கரையணும்
பெண்:
இரவு நேர நிலவிருளில்-கண்ணா
உன் விழிக்கதிர்தனில் காய்ந்திடணும்
உறவுகள் பல முன்னே நாம் நின்றே-என்றும்
உரிமையோடு பேசிடணும்
ஆண்:
சின்ன சின்ன ஊடல் கொண்டே-அதில்
செல்ல மனதின் ஏக்கம் கண்டே
உன்னை நானும் நெருங்கிடணும்-மறுகணம்
உயிரும் அன்பும் கலந்திடணும்
பெண்:
உன் குடும்பம் என் குடும்பமதில் இணைந்திடணும்
ஓர் கூடாக நாமும் சேர்ந்து சிரித்திடணும்
புதிய உறவுகள் பிறந்திடணும்-இங்கே
இனிமை பல வந்து சேர்ந்திடணும்
ஆண்:
இறந்த பின்பு என்ன வேண்டும்-உயிரே
இருக்கும் போதே சொர்க்கம் வேண்டும்-உன்னோடு
வாழ்ந்தே உயிரும் தேயவேண்டும்-உறவு
வாழ்வினெல்லைத் தாண்ட வேண்டும்
பெண்:
நரைதொட்டு வாழ்வின் கரைதொட்டும்- நான்
உன்னோடே சேர்ந்து வாழவேண்டும்
உலகை கைகோர்த்தே சுத்தவேண்டும்-அழகே
உயிர்த்துளி ஒவ்வொன்றையும் ரசிக்கவேண்டும்...
1/6/08
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment